குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

உணவுக்குழாய் புற்றுநோய்.

Go down

உணவுக்குழாய் புற்றுநோய். Empty உணவுக்குழாய் புற்றுநோய்.

Post by Admin Thu Feb 28, 2013 9:49 am

வளர்ந்த
நாடுகளில் 4.6 மில்லியனும், வளர்ந்து வரும் நாடுகளில் 5.4 மில்லியனும்,
புற்றுநோயின் தாக்குதலுக்கு உட்படுகின் றனர். பொதுவாக இந்தியாவில் 1
லட்சம் ஜனங்களில் 110 ஆண்களும், 120 பெண்களும் புற்றுநோயால்
பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவ ஆய்வு அறிக்கை கூறுகிறது.
உலகில் அதிகமாகக் காணப்படும்
புற்றுநோய்களில், உணவுக்குழாய் புற்றுநோயும் ஒன்று. உணவுக்குழாய் என்பது
(Esophagu) தொண்டை முதல் வயிற்றின் மேல்பகுதிவரை (cardia) அமைந்துள்ள
ஒரு குழாய். இக்குழாயைத் தாக்கும் புற்றுநோயை இரண்டு வகையாகப்
பிரிக்கலாம். உணவுக்குழாயின் அடிப்பகுதி, ‘லைன் ஆஃப் கன்ட்ரோல்’ போல்
செயல்படுகிறது.

வாயில் சுரக்கும் உமிழ்நீரை (எச்சில்), அல்கலைன் அல்லது காரம் என்று
சொல்லலாம். இரைப்பைக்குள் உருவாவது அமிலம் (ஹைட்ரோகுளோரிக் அமிலம்).
இந்த அமிலமும் காரமும் உணவுக் குழாயின் கடைசிப் பகுதியில்
சண்டையிடுகின்றன.

அதேநேரத்தில், இந்தக் காரத்துக்கும் அமிலத்துக்கும் நடைபெறும் சண்டை
விரைவில் தீராது. இந்தச் சண்டையில் அமிலம் ஜெயித்தால், உணவுக்குழாயில்,
குறிப்பாக `லைன் ஆஃப் கன்ட்ரோலில்’ புண் ஏற்படும். அந்தப் புண்கள்,
அங்கிருக்கும் செல்க ளால் தானாக `சரி’ செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட
திசுக்கள் புத்துயிர் பெறும் வகையில் இயற்கை படைத்திருக்கிறது.

ஒருவேளை அந்தப் புண்கள், ஆறாமல் இருந்துவிட்டால் என்ன ஆகும்? இங்கு
பயப்படாதீர்கள் என்று சொல்லமாட்டேன். பயந்துதான் ஆக வேண்டும்.
அதாவது, ஆறாத புண்களால், புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. `உலகில்
அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில், உணவுக்குழாய் புற்று நோயும்
ஒன்று. பொதுவாகப் புற்று நோயால் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுவதாக
மருத்துவ அறிக்கைகள் கூறும் அதே வேளையில் உணவுக்குழாய் புற்றுநோய்கள்,
பொதுவாக ஆண்களுக்குத்தான் அதிகமாக வருகிறது என்று மருத்துவ ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.

1. ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (squamous cell carcinoma)

2. அடினோ கார்சினோமா (adenocarcinoma)
உணவுக் குழாயின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புற்று நோய் வரலாம். இந்த புற்றுநோய்கள் பெண்களை விட ஆண் களுக்கு அதிகம் வரும்.

இது வருவதற்கான காரணங்கள் சிகரெட், மது பானங் கள் இவை முக்கிய
காரணங்கள். மிகச்சூடாக உணவு, பானங்களை எடுத்துக் கொள்ளும் பழக்கமும்
புற்று நோயைத் தோற்றுவிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது.

வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்து (vitamin A) குறைபாட்டால் வருகிறது.
அயர்ன் எனப்படும் இரும்புச்சத்து குறைபாட்டால் வருகிறது
ரிபோஃப்லேவின் (Riboflavin) எனப்படும் vitamin B விட்டமின் குறைபாட்டால் வருகிறது.

சரிவிகித உணவு (balanced diet) இல்லாமை யால் வருகிறது.
நெஞ்சு எரிச்சல் போன்ற நோய்களுக்கு பல ஆண்டு களாகஉணவுக்குழாய் புற்றுநோய். 26a
சிகிச்சை எடுத்துக் கொள்வதாலும் அதாவது தொடர் சிகிச்சையினாலும்
வருகிறது. தொடர்ந்து அகாலாசியா என்ற நிலையில் இருக்கும் போது புற்றுநோய்
ஏற்பட வாய்ப்புள்ளது. அகாலாசியா என்பது நீண்ட நாட்களாக வயிறு தொடர்பான,
உணவுக்குழாய், ஜீரண உறுப்பு தொடர்பான எந்த நோயையும் கண்டு கொள்ளாமல்
இருப்பது. இயற்கையாக நமது உடலில் உள்ள புற்றுகளை மட்டுப்படுத்தும்
மரபணுவில் (ஜீ53) ஏற்படும் பிறழ்வுகளால் , புற்று உயிரணுக்கள் பல்கி
பெருகுவது ஊக்குவிக்கப்படுகிறது.

அறிகுறிகள்

ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் காண இயலாமல் இருக்கலாம். முற்றிய
நிலையில் நெஞ்சு எரிச்சல், நெஞ்சு வலி, அனிமியா, டிஸ்பெப்ஸியா, தீராத
முதுகு வலி போன்றவை இருக்கலாம். தொண்டையில் முழுங்க முடியாமல் வலி
இருக்கலாம். எடை குறையலாம். இன்னும் சிலருக்கு இப்படிப் பட்ட அறிகுறிகள்
எதுவும் தோன்றாமலே கூட இருக்கலாம்.

உறுதிப் படுத்துதல்

இருபது ஆண்டுக்கு முன்பு புற்றுநோய் உள்ளது எனக் கண்டுபிடிப்பது மிகக்
கடினம். சாதாரண எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் பேரியம் எக்ஸ்ரே பரிசோதனைகள்
மூலம்தான் ஓரளவு கண்டுபிடிக்க முடிந்தது. இக்காலத்திலும்.

எண்டோஸ்கோபி மூலம் டிஸ்யூ எடுத்து பயாப்ஸி செய்து உறுதிப்படுத்திக்
கொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் மற்றும் முற்றிய நிலையில்
உள்ள புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிப்பதில் எண்டோஸ் கோபி பிரசித்தி
பெற்றது. வயிற்றைத் திறந்து சிகிச்சை அளிக்கத் தேவையில்லை. தீவிர மயக்க
மருந்து தேவையில்லை. ஓரிரு மாதக் குழந்தை முதல் 100 வயது வரை எல்லா
வயதினருக்கும் சிகிச்சை அளிக்கலாம்.

ணி.ஹி.ஷி என்று சொல்லப்படும் எண்டோஸ்கோபி அல்ட்ரா சவுண்ட் மூலம்
கண்டறியலாம். இதில் லோ ரிஸ்க் ஆனால் இதற்கு செலவு கூடுதல் ஆகலாம். சி.டி
ஸ்கேன் எடுத்து வேறு எங்காவது பரவி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

மருத்துவம்

இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால்
பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த இன்னும்
மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உண்மைதான்.

இருப்பினும் புற்றுநோய் என்றாலே மரண தண்டனை என்று நினைத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.

1. முதன்மையாகப் பரிந்துரை செய்வது அறுவை சிகிச்சைதான்.

அதாவது புற்றுநோயால் பாதிக்கப் பட்ட இடத்தை வெட்டி எடுத்து விட்டு வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இணைப்பை உண்டாக்குவது.

2. யாருக்கு எந்த விதமான அறுவை சிகிச்சை என்பதை நோயாளியின் நிலை, நோய்
முற்றியுள்ள நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவர்
தீர்மானிப்பார்.

3. அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் தேவை ஏற்பட்டால் ரேடியேஷன் தெரபி
(Radiation Therapy) அல் லது கீமோ தெரபி (Chemotherapy) ஆகியவற்றுள்
ஏதேனும் ஒன்று கொடுக்கப்படும்.

ஒரு சிலருக்கு அறுவை செய்ய இயலாது. இதற்கு வயது ஒரு முக்கிய காரணம்.
அப்படி அறுவை சிகிச்சை செய்ய இயலாதவர்களுக்கு ஹீமோதெரபி கொடுக்கப்படும்.
அந்நிலையில் ஒரு மெட்டல் ஸ்டெம் (விமீtணீறீ ஷிtமீனீ) பொருத்தி அதன்
வழியாக உணவு கொடுக்கப்படும்.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum