குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

குடும்ப வாழ்வும் அகவை(வயது) எல்லையும்

Go down

குடும்ப வாழ்வும் அகவை(வயது) எல்லையும்  Empty குடும்ப வாழ்வும் அகவை(வயது) எல்லையும்

Post by Admin Sun Feb 24, 2013 8:32 pm

பெண் பதினெட்டைக் கடந்த பின்னும் ஆண் இருபத்திரண்டைக் கடந்ததும்
மணமுடிக்கலாம். குறைந்த அகவை(வயது)த் திருமணம் பெண்ணின் உடல் நலத்தையும்
குடும்பப் பொருண்மிய நிலையையும் பாதிக்கச் செய்யும். பொறுப்புணர்வு,
பக்குவநிலை போதாமையால் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரலாம். காலம்
கடக்க குடும்ப முரண்பாடுகள் தோன்றலாம். குழந்தைகள் பிறந்ததும் பெண்ணின்(ஒரு
குழந்தைக்கு ஐந்து ஆண்கள் வீதம்) அகவை(வயது) ஏறியதாக உள, உடல் மாற்றம்
ஏற்படும். இதனால், ஆணில் பிறிதோர் பெண் மீது நாட்டம் ஏற்பட வாய்ப்பும்
உண்டு. மனைவி ஒழுங்காக ஒத்துழைப்பின் கணவன் பிறிதோர் பெண்ணை நாட
வாய்ப்பில்லை. வீட்டிற்கு வீடு வாசற்படி போல, இவை வீட்டிற்கு வீடு
வேறுபடலாம். முடிவாகச் சொல்வதானால் இளம் அகவை(வயது)த் திருமணம் உளவியல்,
பாலியல், குடும்பப் பொருண்மியம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நல்லதல்ல.



ஆணுக்குப் பெண் நிகரென்றும் பெண்கள் படிப்பின் மீதும் உழைப்பின் மீதும்
நாட்டம் கொள்வதாலும் பெண்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஆண் அமையாமையாலும்
திருமணத்தைப் பிற்போடுகிறார்கள். ஆண்களும் உயர்கல்வி நோக்கிலும் வெளிநாட்டு
வேலைவாய்ப்பிலும் அக்கறை காட்டுவதாலும் ஆண்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற
பெண் அமையாமையாலும் அவர்களும் திருமணத்தைப் பிற்போடுகிறார்கள்.



காதல் தோல்வியாலும் இருபாலரும் காலம் கடந்தும் திருமணம் செய்கின்றனர்.
திருமணம் செய்ய முற்பட்டால் சோதிடத்தில் செவ்வாய்க் குற்றம் மற்றும்
சீர்வரிசை(சீதனம்) என இழுபடலாம். இவ்வாறு தான் காலங்கடந்த திருமணங்கள்
அமைகின்றன. இதனால், இருசாராரும் உளரீதியாகவும், உடல்ரீதியாகவும்
பாதிப்படையலாம்.



காலம் கடத்தலால் உடலமைப்பு திருமண உறவுக்கு ஒத்துழையாமல் இருக்கலாம்
(பெண்களுக்கு 35 அகவையானால் குழந்தையின்மை, ஆண்களுக்கு சுயஇன்பச் செயலால்
ஆண்மைக்குறைவு) குழந்தைகளின்மையால் ஆளுக்காள் பொதுப்பணி, மணமுடித்த
பின்னும் உறவுகளுக்கு உதவுதல்,

மணமுடிப்புக்கு முந்தைய கால அலசலில் முரண்பாடுகள் எனப் பல இருக்கலாம்.
சிறு முரண்பாடுகள் கூட மகிழ்சியைத் தராமல் போகலாம். காலம் கடத்தலால்
இளமையைக் கோட்டை விட்ட இருபாலாரும் இம்முரண்பாடுகளால் மேலும் வெறுப்பைச்
சந்திக்கலாம்.



இளமை என்பது அகவை(வயது)யில் இல்லைப் பாரும். அது பால் வேறுபாட்டிலும்
இல்லை. இளமை என்பது இறுக்கமான உடல் கட்டமைப்பிலும்(உடற் பயிற்சி மூலம் உடலை
வலுப்படுத்தலாம்) வலுவான உளப்பலத்திலும்(உள்ளத்தை அமைதியாகவும் வேண்டாத
எண்ணங்கள் தோன்றாதவாறும் பேணுதல்) தான் தங்கியிருக்கிறது. பெண்களுக்கு 35
அகவையானால் குழந்தை கிடைக்க வாய்ப்பு குறைவு எனலாம். ஆயினும், 45-50
அகவை(வயது) இலும் பலர் குழந்தை பெற்றிருக்கிறார்கள். முரண்பாடுகள் தோன்றின்
உங்களுக்குள்ளேயே பேசித்தீர்க்கலாம். இருவர் உள்ளங்களும்

புரிந்துணர்வுடன் வாழத் தலைப்பட்டால் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.



பாலியல் தளர்வு, குழந்தையின்மைச் சிக்கலுக்கு குடும்ப நல மருத்துவரை
நாடலாம். உளச் சிக்கலுக்கு உளநல மருத்துவரை நாடலாம். வழிகாட்டலும்
மதியுரையும் தேவைப்படின் மதியுரைஞரை(Counsellor)யும் நாடலாம். இவர்களுடன்
உங்கள் உள்ளங்களைத் திறந்து கதைத்து; காலம் கடந்து மணமுடித்தாலும்
மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.



பொதுவாகப் பெண் இருபதிற்குப் பின்னும் ஆண் இருபத்திரண்டுக்குப்
பின்னும் இருபாலாரும் இருபத்தெட்டுக்கு முன்னும் மணமுடிக்கலாம். மணமுடிக்க
முன் வாழ்வுக்குத் தேவையான வருவாயை(அதாவது, நிரந்தரத் தொழில்) தொடர்ந்து
கிடைக்க வழிசெய்ய வேண்டும். ஆணும் பெண்ணும் ஒரே அகவை(வயது) இலும்
மணமுடிக்கலாம். பெண்ணை விட ஆண் ஐந்து அல்லது பத்து அகவை(வயது)
கூடியிருப்பினும் மணமுடிக்கலாம். ஆணை விட பெண் ஒன்றோ இரண்டோ அகவை(வயது)
கூடியிருப்பினும் மணமுடிக்கலாம்.



எப்படியிருப்பினும் இருவருக்குமிடையேயுள்ள அன்பும் விட்டுக்கொடுக்கும்
உளப்பாங்கும் புரிந்துணர்வுமே(Under Standing) மணவாழ்க்கைக்கு அடிப்படை.
இவற்றை அதிகரிக்கச் செய்வது ஊடலும் கூடலுமே. எல்லாவற்றுக்கும் அடிப்படை
வற்றாத பொருண்மிய வளம். இத்தனையும் இருந்தால் மணவாழ்க்கை இனிக்குமே! உறவில்
சுகம் போதாவிடின், சென்னை மரீனாக் கடற்கரையில் உடற்பயிற்சி செய்யலாம்.
குடும்ப வாழ்விற்கு அகவை(வயது) எல்லையும் தேவை தான். அழகான, மகிழ்வான
குடும்ப வாழ்விற்கு கணவன், மனைவி இருவருக்குமிடையே உள்ள நம்பிக்கை தான்
மருந்து.

உங்கள் யாழ்பாவாணன்

உளநல மதியுரைஞர்(Psychological Counsellor)
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum