குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆனதும்..

Go down

குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆனதும்..  Empty குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆனதும்..

Post by Admin Sat Nov 17, 2012 9:15 pm

இவை அனைத்தையும் நீங்கள் பின்பற்றுகிறீர்களா என சரி பார்த்துக்கொள்ளுங்கள் .


  • இப்போது தாய்ப்பால் தவிர்ந்த ஏனைய உணவுகளையும் குழந்தைக்குக்
    கொடுக்கிறேன் .முதலில் நன்கு கடைந்தெடுத்த சோற்றுடன் எனது பாலுடன் சேர்த்து
    ஊட்டினேன் . இதற்காக ஒரு கோப்பையையும் கரண்டியையும் பயன்படுத்தினேன் . 1/2
    தேக்கரண்டியின் அளவை படிப்படியாக அதிகரித்தேன் .
  • அது மட்டுமன்றி நன்கு கனிந்த
    வாழைப்பழம் ,வற்றகைப்பழம் ,பப்பாசி ,மாம்பழம் ,பட்டர் புரூட் போன்ற
    பழங்களையும் ஒரு நாளைக்கு ஒரு தடவை நசித்து ஊட்டினேன் .
  • படிப்படியாக பருப்பையும்
    ,அவித்துப் பிசைந்த சாம்பல் வாழைக்காய் ,பூசணிக்காய்
    ,கரட்,வற்றாளைக்கிழங்கு முதலிய மரக்கறிகளையும் சேர்த்துக்கொண்டேன். ஒரு
    நேரத்தில் ஒரு மரக்கறி மட்டுமே அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.








1. [You must be registered and logged in to see this link.]

2. [You must be registered and logged in to see this link.]

3. [You must be registered and logged in to see this link.]

4. [You must be registered and logged in to see this link.]

5. [You must be registered and logged in to see this link.]


  • சமைக்கும் போது உணவில் சிறிதளவு தேங்காய்ப்பால் சேர்க்கிறேன் .அது
    குழந்தைக்கு மேலதிக சக்தியையும் வாய்க்குச் சுவையையும் தருகிறது .அத்தோடு
    பல விட்டமின்கள் (A,D,E,K) உறிஞ்சப்படுவதற்கு அது உதவும் என்று தெரியும் .
  • ஆரம்பத்தில் குழந்தை திண்ம
    உணவுகளில் பிரியம் காட்டாமல் துப்பத் தொடங்கினாள். இது வழமையானது எனவும்
    ஆறு மாதங்களின் பின் தன்னை பழக்கப்படுத்திக் கொள்வாள் என்பதும் எனக்கு
    தெரியும் . இனிமையாக பேசியும் ,உற்ச்சாகப்படுத்தியும் அவளை சாப்பிட செய்வது
    எனக்கும் குழந்தைக்கும் மகிழ்ச்சி அளிக்கும் அனுபவமாக இருந்தது .
  • இந்த பருவத்தின் போது சீனி உப்பு மற்றும் உறைப்பு போன்றவை குழந்தையின் உணவில் சேர்க்கப்பட கூடாது என்பதை நான் அறிந்திருக்கிறேன் .
  • சமைப்பதற்கு முன் எனது கைகளை
    தண்ணீர் மற்றும் சவர்க்காரம் பாவித்து கழுவுகிறேன் . குழந்தைக்கு உணவூட்ட
    முன் ,எனது கைகளையும் ,குழந்தையின் கைகளையும் கழுவுகிறேன் . மிக சிறந்த
    சுகாதார ரீதியான சகல உணவுகளையும் சமைக்கிறேன் .
  • குழந்தை பிரியமாக இருக்கும் போது
    மட்டுமே உணவு ஊட்டுகிறேன். வலுக்கட்டாயமாக ஒரு போதும் குழந்தைக்கு நான்
    உணவூட்டுவதில்லை .குழந்தைக்கு உணவூட்டுவதற்காக வீட்டில் ஒரு தனியான இடத்தை
    ஒதுக்கியுள்ளேன் . குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு அல்லது ஓரிடத்தில்
    உட்காரவைத்து உணவூட்டுகிறேன் . உணவூட்டும் போது உணவுகள் பற்றியும் அவற்றின்
    சுவைகள் பற்றியும் குழந்தையுடன் பேசுகிறேன் .
  • உணவு உட்கொள்ளும் போது அவளை
    முத்தமிட்டும் கட்டித்தழுவியும் உற்சாகப்படுத்துகிறேன் . குழந்தை உணவை
    உட்கொண்ட பின் அவளுக்கு எனது பாலை ஊட்டுகிறேன் . உணவு வேளைகளுக்கு இடையில்
    குழந்தை பால் கேட்கும் போதெல்லாம் எனது பாலை ஊட்டுகிறேன் .
  • குழந்தையின் மாதாந்த நிறை
    அதிகரிப்பை குறித்து வைப்பது அத்தியாவசியமென்பதை குடும்ப நல உத்தியோகத்தர்
    மூலம் தெரிந்துகொண்டேன் .எனவே அவளது வளர்ச்சி அட்டவணைக்கு எதிராக அதனை
    சரிபார்த்துக் கொள்வதில் மிகக் கவனமாக இருக்கிறேன் .
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum